Thursday, November 4, 2010

தீபாவளி

இது என் முதல் பதிவு தீபாவளியை முன்னிட்டு பதிவு எழுதுகிறேன். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். எல்லோருக்கும் என்னுடைய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
இப்பொழுது விடயத்துக்கு வருகிறேன் தீபாவளி என்றால் என்ன? அன்றைய  தினம்   நாம்  என்ன  செய்ய  வேண்டும்....... சாதாரணமாக  பலர்  சொல்லும்  ஒரே   விடயம்  பட்டாசு   கொழுத்த   வேண்டும்,  உறவினர் வீடுகளுக்கு  போக  வேண்டும்  சரி  வேறு என்ன  செய்யலாம்.  நன்றாக யோசித்து சில  பெரியவர்களிடம்  கேட்டு  நான் தெரிந்து  கொண்ட சில  விடயங்களை  உங்களுக்கும்  தருகிறேன் (யாம்  பெற்ற இன்பம் பெறுக  இவ்வையகம்) 
அதாவது   தீபாவளி அன்று  நாம் செய்ய  வேண்டியது முதலில்  எம்முடைய  சந்தோச தருணங்களை எல்லாம்  முடித்த(பட்டாசு   கொழுத்தல், உறவினர் வீடுகளுக்கு போய் வருதல்) பின்னர்.  எம்  வீட்டுக்கு  மஹாலட்சுமியை  வரவேற்க  வேண்டுமாம் அது  யாரது  மஹாலட்சுமி என்று கேட்டு விட  வேண்டாம்  அவர் தான்  காலாதி  காலமாக  செல்வத்துக்கு அதிபதியாக  இருப்பதாக  எம்மவர்களிடையே ஒரு  ஐதீகம்  உண்டு.  அதனால் அவரை வரவேற்க வேண்டுமாம்.
அதற்கு  என்ன  செய்ய  வேண்டும் வீட்டை  சுத்திகரித்து பூஜை அறையில் எல்லா கடவுளர்களையும்  வைத்து  பூஜை  செய்து பின்னர்  மஹா லட்சுமியை தோத்திரம்  பாடி  மகிழ்விக்க வேண்டுமாம் அப்படியெனில்  வீட்டில் செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம்.........
என்ன  பூஜைக்கு எல்லோரும்  ரெடி ஆயிட்டிங்க போல இருக்கு....
Add caption


பி.கு:  இவை  சில  பெரியோர்கள் எனக்கு சொன்னது நான் உங்களுக்கு சொல்லியிருக்கிறேன் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்   (என்னடா இவன்  சினிப்பிரியன் என்று பெயர் வைத்து கொண்டு தீபாவளி பற்றி சொல்கின்றானே என்று நினைக்காதீர்கள் எல்லாம் ஒரு  சென்டிமென்ட் தான்)

அப்பாடா........  ஒரு  மாதிரி   இன்னிக்கு  முடிச்சாச்சு........   இனி  நாளைக்கு  என்னாவ போவுதோ..............................

தயவு செஞ்சி  ஏதாவது   கருத்து   சொல்லுங்க  இல்லைனா  எனக்கு  மண்டையே  வெடிச்சிடும்

No comments: