Tuesday, November 9, 2010

சூப்பர் ஸ்டாரின் சூடான திட்டம்

                    2 வருடத்துக்கும் மேலாக இழுத்தடித்த எந்திரனுக்கு பிறகு இப்பொழுது தான் ஓய்வாக இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  இதற்கிடையில் அவரது அடுத்த படம் பற்றி மெதுவாக தகவல்கள் கசிய ஆரம்பித்திருக்கின்றன. ரஜினியோ எந்திரன் திரைக்கு வந்த சில நாட்களிலேயே இமயமலைக்கு சென்று விட்டார்.
        இப்பொழுது அவரது அடுத்த ப்ளான் என்ன என்பது பற்றி கோடம்பக்கத்தில் கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டது. சமீக காலமாக ரஜினி, பி.வாசு இயக்கும் சந்திரமுகி பகுதி 2 ஆகிய வேட்டையன் படத்தில் அஜீத்துடன் இணைந்து நடிப்பார். எனவும், சில செய்திகள் வந்தன. அது மட்டுமன்றி எந்திரன் வெற்றியைத்தொடர்ந்து கலாநிதி மாறன் இயக்கப்போகும் படத்தில் சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் இணைந்து நடிக்கப்போவதாகவும். அந்த படத்தை ஷங்கர் தான் இயக்கப்போகின்றார் என்றும் அதன் பட்ஜெட் 500  கோடி  எனவும் தகவல்கள் வந்தன.
         இத்தோடு இன்னொரு கூடுதல் தகவலாக சூப்பர் ஸ்டார் பாட்ஷா பகுதி 2 ல் நடிக்கப்போவதாக கூட  தகவல் வருகின்றது.  ஆனாலும் இந்த வரிசையில் இப்போது இடம்பெற்றிருக்கும் தகவல்.   சூப்பர் ஸ்டார் அடுத்தாக நடிக்கும் படம் அவரது பால்ய நண்பரும் கலையுலக போட்டியாளருமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வரும் உலக நாயகன் கமலின்  மருத நாயகம் தான் என்பதாகும். மீண்டும் இரண்டு துருவங்களும் இணைந்தால் ரசிகர்களுக்கு அடுத்த தீபாவளி காத்திருக்கிறது.
                   ஆனாலும் அவர் மனத்தினில் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பது அந்த பாபாஜிக்குத்தான் வெளிச்சம்.

No comments: