Wednesday, November 10, 2010

கமலஹாசனின் தலைவன் இருக்கின்றான்

           மன்மதன் அம்பு படத்தை தொடர்ந்து கமல் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். 
             ஏற்கனவே கமலின் மருதநாயகம், மர்மயோகி, தலைவன் இருக்கின்றான். போன்ற மூன்று படங்களும்  இழுபறியில்  இருந்தன. ஆனாலும் சளைக்காத உலக நாயகன் இவற்றை விடுத்து உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மன்மதன் அம்பு என்ற படத்தை நடித்து முடித்தார். அது  வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் இந்த நேரத்தில் கமல் இன்னுமோர் கூடுதல் தகவலை அறிவித்திருக்கிறார்.
                அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பதில் அளித்துள்ளார். அதாவது அவரது அடுத்த படம் தலைவன் இருக்கின்றான் தான் என்பதையும். அப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, தான் அல்லது தனக்கு மிக நெருக்கமான யாரோ ஒருவர் தான் இயக்குவார் எனவும் தெரிவித்துள்ளார். 
                   
              இதற்கிடையில் உலக நாயகனின் மருத நாயகத்தில் சூப்பர் ஸ்டார் இணைவார். என்றும் கூடுதல் தகவல்கள் கசிகின்றன.  ஆனால் இது பற்றி ரஜினியோ, கமலோ எந்தவிதமான தகவல்களும் வெளியிடவில்லை

No comments: