பொதுவாக தமிழ் நடிகைகள் எல்லோருக்கும் வரும் ஆசை இப்போது புன்னகை இளவரசி சிநேகாவிற்கும் ஏற்பட்டுள்ளது. அது என்ன புதிய ஆசை என்பதற்கு எதுவும் இல்லை சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும். என்பதே அந்த ஆசை. எந்திரனின் தாக்கம் உலக சினிமாவில் வெகுவாக பாதித்திருக்கிறது. சில நாட்களுக்கு முன் இந்தி நடிகையான தீபிகா படுகோன் எமது சூப்பர் ஸ்டாருடன் நடிக்க ஆசை உள்ளது. என கூறி இருந்தது நினைவிருக்கும் என நினைக்கிறேன் இந்த ஆசை இப்போது சினேகா அம்மையாருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
பெருந்துறையில் சுசி ஈமு கோழி உணவகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட சினேகாவை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போதுதான் சினேகா இதனை கூறினார். தான் நடித்த பவானி திரைப்படம் சீக்கிரமே வெளியாகும் என கூறியதோடு. தனக்கு பிடித்த நடிகர் கமலஹாசன் நடிகை ராதிகா. எனவும் கூறிய சினேகா எனக்கு ரஜினியின் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும் அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க ஆசை எனவும் கூறினாராம்.(அவரோடு நடிக்க யாருக்குத்தான்ஆசை இல்லை)
No comments:
Post a Comment